Tuesday 1 July 2014

மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள் மற்றும் சத்துக்கள் - தினம் ஒரு தகவல்...!



மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள்:

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.


மிளகில் உள்ள சத்துக்கள்:

தாது உப்புகள்

1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு


வைட்டமின்கள்

1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்


சளித் தொல்லைக்கு:

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.


பற்களுக்கு:

மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.


தலைவலி:

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.


இரத்தசோகைக்கு:

கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .


பசியின்மைக்கு:

ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

Saturday 28 June 2014

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்...!

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும்.

நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.


ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.

Thursday 26 June 2014

தாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி...!



அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல் இந்த தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க தெரியாதவனுக்கு அந்த தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்கு தேன் எவ்வளவு அவசியமோ, அது பேல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.

பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுபப்களை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதை விலாவரியாக விவரிக்கிறது இந்த நூல். காதலுடன் மனந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு. அதற்கு காரணம் அவர்கள் செவ்வனே காமத்தை கற்றுக்கொண்டு அதை நடைமுறைபடுத்தாதது தான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.

பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு. இவர்களில் பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம் போல் நடை உடையவள். பெண்களில் இவள் முதல் தரமான இவளை எல்ல காலங்களிலும் கூடுதல் இனிது. சித்தினி என்பவள் பெண் யானையை போன்றவள். சங்கினி என்பவள் வடிவமான உடல் அமைப்பு பெறாதவள். அத்தினி என்பவள் முரட்டுத் தன்மை நிறைந்தவள்.

அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதை குறிப்பதாகும். அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாழ், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி, போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும் போது காமம் பெருகும்.

உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டை சுவைத்து நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கை£லும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையும் சுவைத்தல் போன்றவை மன்மத கலையாகும்.

இந்த மன்மத கலையை ஆண்கள் அறிந்து எந்த நிலையில் என்ன மாதிரியான முன் விளையாட்டுகளை செய்ய வேண்டுமோ அதைச் செய்து நாயகியுடன் உறவு கொண்டால் அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரை பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.
ஆடவர்களை முயல், காளை, குதிரை, என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாக பிரிக்கலாம். ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்த பிரிவு ஏற்படுத்தபட்டிருக்கிறது.

மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல், குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல், பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.

குறைந்த ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில் ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம். ஆனால் பெண்களுக் குஇன்பம் கிடைக்காது. அது போல அதிக ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன் நிளம் குறைந்த  உறுப்பு உள்ள ஆண் இணைவது நிச்ச சேர்க்கை எனப்பமு. இதில் ஆண் - பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம், மிகவும் வேறுபடுவதால் இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.

ஆண் பெண் சேர்க்கை காலமானது அற்பகாலம். மத்திம காலம், அதிக காலம், என்று பிரிக்கபடுகிறது. பெண்ணுடன் ஆண் கூடும் போது அவளும் உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும், நேருமாறு சேர்வதை விட ஆண் - பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிகழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வருணிக்கப்படுகிறது.

ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்தவேகம், மத்தி வேகம், சண்ட வேகம் என்று பிரிக்கப்படுகிறது. அந்தந்த வேகமுடைய ஆண் - பெண் ஒன்று சேரும் போது தான் இருவரும் உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும். இல்லாத பட்சத்தில் இருவரில் ஒ-ருவர் ஏமாற்றத்தையே அடைய முடியும்.

கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால் வயது இங்கே பிரிக்கப்படுகிறது. பெண்களை பொருத்த வரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்கு மேல் முப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வரை பேரிளம் பெண், ஐம்பத்தைந்துககு மேல் விருத்தை எனவும் சொல்லலாம்.

மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடினால் வலு உண்டாகும். தருணி, பேரிளம் பெண்களுடன் கூடும் போது விதவிதமான சுகபோகங்களை அனுபவிக்க முடியும். முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.

Tuesday 24 June 2014

காலி பிளவரின் குணங்கள்... - உங்களுக்காக...!




கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

அதிக எடை போடாமல் இருக்க உதவுவது.

பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள்.

 வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.

சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

 காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது.

பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம்.

 காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.

Monday 23 June 2014

இனி கிளாமர் உடை மட்டும் தான் அணிவேன்...!



தமிழ் சினிமாவில் நடித்த சில படங்களிலேயே நம்பர் 1 நடிகை என்ற இடத்தை பிடித்தவர் ஹன்சிகா. இவர் தன் உடை விஷயத்தில் தன் அம்மா பேச்சை கூட கேட்க மாட்டாராம். தனக்கு பிடித்தது போல் தான் உடையணிந்து வெளியே செல்வாராம்.

ஆனால் சிம்புவின் மீது கொண்ட காதலால் அவருக்கு பிடித்தது போல் தன்னை மாற்றிக் கொண்டாராம், அவர் சொல்வது போன்று தான் உடை விஷயத்தை கடைப்பிடித்திருக்கிறார். பின்பு இவர்கள் காதல் முறிந்து இருவரும் பிரிந்தது எல்லாம் ஊருக்கே தெரிந்த விஷயம்.

தற்போது சுதந்திர பறவையாக மீண்டும் தன் கிளாமர் உடையெல்லாம் எடுத்து அணிய ஆரம்பித்து விட்டாராம், இனி காதலும் இல்லை, யார் பேச்சையும் கேட்கவும் தேவையில்லை என்று சந்தோஷமாக இருக்கிறார் ஹனிசிகா.

சமந்தா-சூர்யா போட்டோவுக்கு மகேஷ்பாபு ரசிகர்கள் எதிர்ப்பு....!

சமந்தாவுடன் மகேஷ்பாபு ரசிகர்கள் மீண்டும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு, பீச்சில் நடக்கும்போது அவரை பின்தொடர்ந்து கையையும், காலையும் ஊன்றி பட ஹீரோயின் வருவதுபோல் நேனொக்கடெய்ன் என்ற படத்துக்கு கடந்த 3 மாதத்துக்கு முன் ஆந்திராவில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.


 இதற்கு நடிகை சமந்தாவும், சித்தார்த்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்துவதுபோல் காட்சி இருப்பதாக குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதை கண்டு கோபம் அடைந்த மகேஷ்பாபு ரசிகர்கள் சமந்தா, சித்தார்த் இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து இணைய தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தனர். வாரக்கணக்கில் நடந்த இந்த மோதல் பின்னர் சூடு குறைந்தது.

தற்போது இது மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. பீச்சில் படுத்திருக்கும் சமந்தாவின் காலை சூர்யா தடவுவதுபோல் அஞ்சான் படத்தின் ஸ்டில் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்த மகேஷ்பாபு ரசிகர்கள் தற்போது போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

ஒரு நடிகையின் காலை ஒரு ஆண் பிடிப்பதுபோல் போஸ் கொடுத்திருப்பது எப்படி ஏற்க முடியும்? என்று சமந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sunday 22 June 2014

ஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா..? - எச்சரிக்கை...!

கணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு.


இதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரிசோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சரியான தூக்கமில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கணவர் அல்லது மனைவியர், தங்கள் துணைக்கு கொடுக்கும் சில தொல்லைகள்தான் என்பதும் அப்போது தெரிய வந்தது. அதாவது, குறட்டை, பற்களைக் கடித்தல், படுக்கையில் புரள்தல் போன்றவற்றை அவர்கள் தொல்லைகளாக குறிப்பிட்டனர்.

இதுபோன்ற தொல்லைகளால் ஆரம்பக் காலங்களில் தூக்கம் கெட்டாலும், நாளடைவில் இதய நோய் போன்றவை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், தம்பதியருக்குள் ஒரே படுக்கையறையில் தூக்கம் கெட்டால், அவர்கள் `டைவர்ஸ்’ வரை போய்விட நிறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்தனர் அந்த ஆய்வாளர்கள்.

பின்குறிப்பு : இந்த ஆய்வு முடிவு, திருமணம் ஆகி குழந்தை பெற்ற தம்பதியருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற இளஞ்ஜோடிகள் தாராளமாக படுக்கையில் உருளலாம், புரளலாம்!

 
இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…