Friday 6 June 2014

உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்..!

உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.


மேலும் அதிக எடை உள்ள பொருட் களை தூக்கினால் தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டு பாடாய் படுத்திவிடும். ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும், முழங்கால் எலும்பின் மேல்பகுதியும் இணையும் இடமே முழங்கால் மூட்டு ஆகும். தொடை முழங்காலுக்கான முக்கிய ‘ஜங்ஷன் இது. நமது உடலில் அமைந்திருக்கும் பெரிய மூட்டும் இதுதான். வயதாக வயதாக தொந்தரவு தரும் மூட்டும் இதுதான்.

தொப்பிபோல் தட்டுப்படுகிறதே அதுதான், knee cap (Patella) எனப்படும் மூட்டுச்சில்லு. முழங்கால் மூட்டின் முக்கிய பகுதிகள் இந்த மூட்டுச்சில்லுக்கு பின்னால்தான் இருக்கின்றன. தொடை எலும்பு கீழே செல்லச்செல்ல அகன்று தடித்து, கொண்டைபோல் இருக்கும். அதன் கீழ்ப்பகுதி முழுவதையும் குருத்தெலும்பு போர்த்தியுள்ளது. இந்த கொண்டைப் பகுதி இரண்டாகப் பிரிகிறது. அவற்றின் நடுவே உள்ள சற்று பள்ளமான பகுதியில்தான் மூட்டுச்சில்லு அமைந்து மேலும் கீழுமாய் அசைகிறது.

முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு வித்தியாசமானது. பிணைப்பு நாண்களும் (cruciatel Ligament) மெனிஸ்கஸ் எனப்படும் குஷன்களும்  இந்த மூட்டில் உள்ளன. மூட்டை சுற்றி மிக மிருதுவான   எலும்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த மூட்டில் சைனோவியம் என்கிற மூட்டுச் சுரப்பிப் படலம் அதிகம் உள்ளது. அதனால் அதை சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்புண்டு. சிறுநீரகத்தில் ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டால் கூட இந்த மூட்டில் வீக்கம் ஏற்படலாம். அவ்வளவு ஏன், நம் ஈறுகளிலோ தொண்டையிலோ பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எதிர்கொள்ள உடல், ‘காக்கும் எதிர்வினைப்பொருட்களை‘ (Antibodies) தோற்றுவிக்கும். அவை இந்த மூட்டில் வந்து தங்கி வலியை (reactive arthritis) ஏற்படுத்தும்.

நமது எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கிறதே அந்த இடம்தான் மூட்டுகள். அதில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை   உண்டு. தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா   மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு. ஓடுகிறோம். விளையாடுகிறோம். வேலைகளைப் பார்க்கிறோம். இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது. இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை. மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.

முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும். இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான   காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான   குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை   குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

தடுக்கும் முறைகள்...

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். (இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

6. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப் பழக்கம்

1. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.
2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டியவை காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து - உங்களுக்கு தெரியுமா..?


காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி  பிடிப்பதால் வரும்.  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி  காதுவலி வந்தால் உடனே காதுக்குள்  எதையாவது போட்டு நுழைக்க கூடாது.


இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன  செய்வதென்று  தெரியாமல் விழிக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும். காது  வலி வந்தால் தேங்காய்  எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும்  புண் ஆறி வலி குறையும்.

தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும். தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி  சாறு பிழிந்து  அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை  போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி கு றையும்.

சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து  குளித்து  வந்தால் காது இரைச்சலும் அகலும். கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமது ரப்பொடி சேர்த்து தைலம் செய்து  தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும்.

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா..? - எச்சரிக்கை...!



உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா..?

கட்டாயம் படிக்க வேண்டியது அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது.

எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள்.

அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...

அலர்ஜிக்கு 1000 காரணங்கள்...! - தெரிந்துகொள்ளுங்கள்




ஒவ்வாமை... இது எப்போது வேண்டுமா னாலும் யாருக்கும் வரலாம். நேற்று வரை நன்றாக இருந்த ஒருவருக்கு இன்று திடீரென ஏதோ ஒன்று  அலர்ஜியாகி அவதியைக் கொடுக்கலாம்.


அலர்ஜிக்கான காரணங்கள் ஆயிரக்கணக்கானவை. சின்ன தூசியிலிருந்து, சூரிய ஒளி வரை எது, யாருக்கு,  எப்போது அலர்ஜியை தரும் என்று சொல்வதற்கில்லை. பரவலாக காணப்படுகிற சில வகையான ஒவ்வாமை பற்றியும் அவற்றின் அறிகுறிகள் மற்றும்  தீர்வுகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் சரும மருத்துவ நிபுணர் தலத் சலீம்.

‘‘கல்லூரியில் படிக்கிற மாணவி அவர். ‘ஒரு வாரமா கையெல்லாம் பயங்கர அரிப்பு டாக்டர்... அங்கங்க சிவந்து போயிடுது. ராத்திரியில இந்த அரிப்பு  ரொம்ப அதிகமாகுது. இத்தனைக்கும் நான் புதுசா எந்த காஸ்மெட்டிக்ஸும் யூஸ் பண்ணலை. பாத்திரம் தேய்க்கிற பவுடர்லயோ, துணி சோப்புலயோ  கூட கை வைக்கலை. திடீர்னு ஏன் இப்படி ஆகணும்? நானும் ஏதேதோ கிரீம், ஆயின்மென்ட்டெல்லாம் ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். சரியாகலை’  என்றார்.

அந்தப் பெண்ணின் கைகளைப் பரிசோதித்த போது, வலது கையில் 2 விரல்களிலும், இடது கையில் ஒரு விரலிலும் சிவந்து, அலர்ஜியாகி இருந்தது  தெரிந்தது. அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் பேசியதில் அவரது திடீர் சரும அலர்ஜிக்கான காரணம், அவர் புதிதாக ஓட்ட ஆரம்பித்திருக்கிற டூவீலர்  என்பதும், அதன் கைப்பிடியில் உள்ள ஸ்டீல் பகுதியும்தான் என்று தெரிந்தது.

அடிக்கடி டூ வீலரின் கைப்பிடியைத் தொட்டதால் உண்டான அலர்ஜி அது. வண்டி ஓட்டும் போது கைகளுக்கு கிளவுஸ் அணிந்து கொள்ளச்  சொல்லிவிட்டு, அலர்ஜியை குறைக்க சில மருந்துகளையும் பரிந்துரைத்ததில், சில நாட்களில் பிரச்னை சரியானது. இதைத் தான் ‘கான்டாக்ட்  டெர்மாடைட்டிஸ்’ என்கிறோம். சருமத்துக்கு ஒவ்வாத ஏதோ ஒரு அந்நியப் பொருள் அதன் மீது படுவதன் விளைவாக, அரிப்பும் தடிப்பும் ஏற்படும்.  சருமத்தின் மேல் லேயரான எபிடெர்மிஸ் மற்றும் அதற்கடுத்த லேயரான டெர்மிஸில் உள்ள திசுக்களில் இப்பாதிப்பு தென்படும்.

அறிகுறிகள்

அரிப்பு, வலி, எரிச்சல், சிவந்து போதல், தடிப்பு, நடுவில் வெள்ளைப் புள்ளியுடன் கூடிய சிவந்த, வட்ட வடிவத் தடிப்புகள் போன்றவை தென்படும். இது சில நிமிடங்களில் இருந்து, சில மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒவ்வாமைக்குக் காரணமான பொருளுடன் மறுபடி தொடர்பு ஏற்படாத வரை  பிரச்னை இருக்காது. கான்டாக்ட் டெர்மாடைட்டிஸ் எனப்படுகிற இந்தப் பிரச்னைக்கு கிட்டத்தட்ட  30 ஆயிரம் காரணிகள் இருப்பதாக  சொல்லப்பட்டாலும், அவற்றில் 25 காரணிகள்தான் பெரும்பாலான அலர்ஜிகளை ஏற்படுத்துகின்றன.

அலர்ஜியின் வகைகள்

உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, உறைவிடம் வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்கு  ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  உதாரணத்துக்கு... முட்டை, பால், பாதாம், இறால், சீஸ், மகரந்தம் மற்றும் குறிப்பிட்ட சில மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  சிலருக்கு  வாட்ச், கவரிங் நகைகள், நிக்கல், தங்கம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்கள் கூட ஒவ்வாமையை உருவாக்கலாம்.

கெமிக்கல் உபயோகத்தாலும் ஒவ்வாமை வரலாம். ஆல்கஹால், டர்பன்டைன், அசிட்டோன், கீடோன், லேட்டக்ஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்ட  ரசாயனங்களுடன் தொடர்புடைய வேலையில் இருப்போருக்கு இந்த அலர்ஜி வரலாம். வீட்டில் பாத்திரம் தேய்க்கவோ, துணி துவைக்கவோ  உபயோகிக்கிற சோப் மற்றும் டிடர்ஜென்ட் கூட ஒவ்வாமையைத் தரலாம். பியூட்டி பார்லர்களில் வேலை பார்க்கிற பெண்களுக்கு, சோடியம் லாரல்  சல்ஃபேட் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அழகுசாதனங்களைக் கையாள்வதன் மூலம் ஒவ்வாமை வரலாம்.

போட்டோ கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்பது  துணியால் மூடப்படாத சருமப் பகுதிகளில் உண்டாகக் கூடிய ஒருவித அலர்ஜி. எளிமையாகச்  சொல்வதானால் சூரிய வெளிச்சமும், யுவி கதிர்களும் சருமத்தில் பட்டு, அதன் விளைவாக ஏற்படுகிற ஒவ்வாமை இது. சிவந்த நிறத் தடிப்புகள்,  செதில் செதிலான தோற்றம், சின்னச் சின்ன கட்டிகள் போன்றவை இதன் அறிகுறிகள்.

எப்படிக் கண்டுபிடிப்பது..?

உணவுகளால் ஏற்படுகிற அலர்ஜியை கண்டுபிடிக்க ஒரு எளிமையான வழி உள்ளது. ஒவ்வாமை ஏற்படுகிற அன்று என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்  எனப் பட்டியல் போட்டு வையுங்கள். இரண்டாவது முறை ஒவ்வாமை ஏற்படும்போதும் அன்றைய தினம் சாப்பிட்ட உணவுகளைப் பட்டியலிடுங்கள்.  இரண்டு நாளைக்கும் பொதுவான உணவு ஏதேனும் உண்டா எனப் பாருங்கள். மூன்றாவது முறையும் அப்படி இருந்து, மூன்று முறைக்கும் பொதுவான  உணவு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதுதான் உங்கள் அலர்ஜிக்கான காரணமாக இருக்கும்.

மிகவும் குறைந்த அளவு ஒவ்வாமை என்றால், ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். பிளெயின் கேலமைன் லோஷன் தடவலாம். அரிப்பும் எரிச்சலும்  சிவந்து போதலும் அதிக மானால், மருத்துவரிடம் ஆயின்மென்ட், ஆன்ட்டி ஹஸ்டமைன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். எதற்கும் கேட்காமல்  தொடரும் அலர்ஜி என்றால் சரும மருத்துவரிடம் முழு ஆலோசனை மேற்கொள்வதே சிறந்தது. அவர் அலர்ஜிக்கான காரணத்தைக் கண்டறிய ரத்தப்  பரிசோதனையோ, பேட்ச் டெஸ்ட்டோ செய்யப் பரிந்துரைப்பார். அலர்ஜிக்கான காரணம் தெளிவாகத் தெரிந்ததும், அதற்கேற்ப சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.

தடுப்பு முறைகள்...

வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக 11 முதல் 3 வரையிலான வெயிலைத் தவிர்க்கவும். பெரும்பாலான சன் ஸ்கிரீன் கிரீம் மற்றும்  லோஷன்களில் பிஏபிஏ என்கிற கெமிக்கல் இருக்கும். சூரிய வெளிச்சத்தால் அலர்ஜி ஏற்படுகிறவர்கள், அதைத் தவிர்க்க வேண்டும். பிஏபிஏ  கலப்பில்லாத சன் ஸ்கிரீனை கவனமாகத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.

சருமம் முழுவதும் மறைகிற மாதிரி உடையும், தலைக்குத் தொப்பியும் அணிவது பாதுகாப்பானது. கெமிக்கல் தொடர்பான வேலையில் இருப்போர்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். உதாரணத்துக்கு கைகளுக்கு கிளவுஸ் அணிவது, பாதுகாப்பான உடை அணிவது,  கெமிக்கல் பாதிப்பைத் தடுத்து நிறுத்தும் கிரீம் உபயோகித்து வேலை பார்ப்பது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.  டிடர்ஜென்ட், சோப்  போன்றவற்றை வைத்து வீட்டுவேலை செய்கிற பெண்களும், ஷாம்பு, கலரிங், பிளீச் போன்றவற்றைக் கையாளும் பார்லர் வேலையில் ஈடுபடுகிற  பெண்களும் கைகளுக்கு கிளவுஸ் அணிய வேண்டும்.

வேலை செய்து முடித்ததும், கைகளை நன்கு கழுவித் துடைத்துவிட்டு, மாயிச்சரைசர் தடவ வேண்டும்.  அலர்ஜிக்கு காரணமான உலோகங்களை  உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சில நேரங்களில் சிலவித சத்துக் குறைபாடுகள் கூட ஒவ்வாமைக்கு இடம் கொடுக்கலாம். அதைத் தெரிந்து கொண்டு,  ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸும், வைட்டமின் ஏ, சி, இ, டி மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ள மல்ட்டி வைட்டமின் மருந்து களை எடுத்துக் கொள்வதன் மூலம்  இதிலிருந்து தப்பிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் குறிப்பிட்ட அளவு வைட்டமின் சி மற்றும் டி சத்து நிறைந்த  மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் நல்லது. நாள்பட்ட ஒவ்வாமையாகத் தெரிந்தால்,  சரும மருத்துவரைப் பார்த்து ஆலோசனையும்
சிகிச்சையும் எடுப்பதே சிறந்தது.’’

பருவப் பெண்களின் தாயா நீங்கள்...? - இதப்படிங்க...!



இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், தாய்மார்களாகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்து கொண்டீர்களோ அதே போல், இந்தப் பருவத்திலும், கவனிக்க வேண்டியது அவசியம். பெண்களின்வாழ்க்கையில் டீன் ஏஜ் என்பது வசந்தகாலம் போன்றது. பொதுவாக, 13 மதல் 8 19 வயது வரையிலான பருவத்தை டீன் ஏஜ் என்கிறோம். இந்த, டீன் ஏஜ் பருவம் பெண்களின் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு காலதாமதம் ஏற்படலாம்; உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால், 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது. சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண நிகழ்வே இது. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை, ஒரு நோய் போல கருதுவர். எனவே, இது குறித்து, தாய்மார்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித் தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப்பூர்வமாக பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், இந்த பருவத்தில் எல்லாருக்கும் இப்படித்தான் உடல் வளர்ச்சி இருக்கும். பெற்றோர் எடுத்துக் கூறுவது அவசியம். அதோடு, வெளியிடங்களில், தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின், டீன் ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி மனம் விட்டு பேச வேண்டும். இது, அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், தாயுடனான நெருக்கத்தையும், பாசத்தையும் மேம்படுத்தும்.

இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால் டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிடமாட்டார்கள். இதனால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப்படுத்துவதுடன், ஹீமோகுளோபின் அளவை, 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

 
இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…